Monday, March 17, 2008

என்ன சொல்ல போகிறாய்!?


அந்த மரத்தின் மேல் நின்றபடி இயற்கை காட்சிகளை ரசித்தபடி நின்றிருந்தனர் சிவனும்.. பார்வதியும்... மரத்தின் கீழ் சோம்பலாய் கண் மூடி அமர்ந்திருந்த அழகான அவன்மேல் இருவரின் கவனமும் சென்றது.

"சுவாமி! இவனுக்கு நாம் ஏதும் வரம் தரலாமா?"

முக்காலமும் உணர்ந்த சிவன் மெல்ல சிரித்தார். "நான் வேண்டாமென்று கூறினால் நீ கேட்கவா போகிறாய்! சரி. இவனுக்கு இப்போது ஒரு சிறிய இடையூறை உண்டாக்குவோம். அவன் 'மம்மி' என்று கத்தினால் நீ தரிசனம் கொடு. 'டாடி' என்று கத்தினால் நான் தரிசனம் தருகிறேன்."

பார்வதி முகம் முழுக்க சந்தோஷத்துடன் சரியென தலையசைக்க.. மரத்திலிருந்து ஒரு பழம் உதிர்ந்து பையனின் தலைமேல் நச்சென்று விழுந்தது.

பையன் கத்தப்போகும் வார்த்தைக்காக சாமிகள் காத்திருக்க, தலையில் விழுந்த ஆப்பிள் பழத்தை கையில் எடுத்துக்கொண்டு பழம் ஏன் மரத்தின் மேலிருந்து கீழே விழுகிறது என யோசிக்க ஆரம்பித்தான் நியூட்டன்.

சர்வேசனின் நச்சென்று ஒரு கதை போட்டிக்காக...... :))

32 comments:

நாகை சிவா on Sunday, December 16, 2007 4:20:00 PM said...

சென்ஷி...

ரூம் போட்டு யோசிக்குறாப்புல இருக்கேன்...

:)

ஆயில்யன் on Sunday, December 16, 2007 4:56:00 PM said...

அய்யோஓஓஓஓஓஓஓஓஓஒ!

கோபிநாத் on Sunday, December 16, 2007 6:41:00 PM said...

நன்றாக இருக்கு...;)

காட்டாறு on Monday, December 17, 2007 10:03:00 PM said...

நெசமாவே ரசிச்சேன். சூப்பர் நச்.

வினையூக்கி on Monday, December 17, 2007 11:09:00 PM said...

அட்டகாசமா இருக்கு நண்பா... இப்படி எல்லாம் என்னால் யோசிக்க முடியலியேன்னு கொஞ்சம் பொறாமையாக் கூட இருக்கு

சென்ஷி on Monday, December 17, 2007 11:10:00 PM said...

// நாகை சிவா said...
சென்ஷி...

ரூம் போட்டு யோசிக்குறாப்புல இருக்கேன்...

:)//

எதுக்காக புலி?!.. ஸ்மைலிக்கு நன்றி :)))

சென்ஷி on Monday, December 17, 2007 11:14:00 PM said...

//ஆயில்யன் said...
அய்யோஓஓஓஓஓஓஓஓஓஒ!//

எதுக்கு சின்னப்புள்ளத்தனமா இத்தன ஓஓ.. ஒரு ஓ பத்தாதா.. ஓ போடுங்கறதுக்கு பதிலா அய்யோன்னு தப்பா டைப் பண்ணிட்டீங்க. உட‌னே த‌மிழ் க‌த்துக்க‌ பாருங்க‌.
TBCD ந‌ல்ல‌ த‌மிழாசிரிய‌ராம். சொல்லிக்கிட்டாங்க‌ :))

சென்ஷி on Monday, December 17, 2007 11:15:00 PM said...

//கோபிநாத் said...
நன்றாக இருக்கு...;)//


தேங்க்ஸ்டா மாப்பி :))

சென்ஷி on Monday, December 17, 2007 11:17:00 PM said...

//காட்டாறு said...
நெசமாவே ரசிச்சேன். சூப்பர் நச்.//

நெசமாவேவா.. அப்ப இத்தன நாளா போட்ட சூப்பர் கமெண்ட்டெல்லாம் சும்மா லு..லு..வுக்கா :((

வாழ்த்துக்கு நன்றி :))

shivanantham on Monday, December 17, 2007 11:56:00 PM said...

கதை நல்லா இருக்கு. நான் ஒரு விளம்பர பத்திரிக்கை நடத்திவருகிறேன். நான் இந்த கதையை
பிரசுரிக்கலாமா?
உங்கள் பதிலை அனுப்பவும்:shiv_telecomcud@rediffmail.com or visit: www.shiva-telecom.blogspot.com

shivanantham on Monday, December 17, 2007 11:56:00 PM said...

கதை நல்லா இருக்கு. நான் ஒரு விளம்பர பத்திரிக்கை நடத்திவருகிறேன். நான் இந்த கதையை
பிரசுரிக்கலாமா?
உங்கள் பதிலை அனுப்பவும்:shiv_telecomcud@rediffmail.com or visit: www.shiva-telecom.blogspot.com

அபி அப்பா on Tuesday, December 18, 2007 12:01:00 AM said...

அனேகமா பரிசுக்கான கதை!!!

நிலா on Thursday, December 20, 2007 10:39:00 AM said...

இது இது இதேதாங்க, இத்தனை சுருக்கமா நச்சுன்னு,


ஹ்ம்ம் முதல் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் சென்ஷி

சென்ஷி on Friday, December 28, 2007 1:54:00 AM said...

என்னங்க நிலா..
முதல் பரிசு பெற்றதுக்கா.. இல்ல பெறுவதற்கா :))

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நிலா :))

SurveySan on Friday, December 28, 2007 5:00:00 AM said...

:) பரிசு worthy :)

.:: மை ஃபிரண்ட் ::. on Sunday, December 30, 2007 11:29:00 AM said...

ஹாஹாஹா... நல்லா இருக்கு. ;-)

Nithya A.C.Palayam on Sunday, December 30, 2007 11:32:00 AM said...

வித்தியாசமா யோசிக்கரீங்க,நன்றாக இருக்கு

துளசி கோபால் on Monday, December 31, 2007 2:04:00 AM said...

நச்:-)))))

cheena (சீனா) on Monday, December 31, 2007 8:34:00 AM said...

உண்மையிலேயே இது வரை படித்த கதைகளில் இது தான் நச்சென்ற கதை - பரிசுக்குப் பரிந்துரைக்க வேண்டிய கதை.

அறிவன் /#11802717200764379909/ on Monday, December 31, 2007 10:32:00 AM said...

வித்தியாசமான சிந்தனை..
நல்ல குறுங்கதை...

aruna on Monday, December 31, 2007 12:16:00 PM said...

ஆப்பிள் நச் நச்னு விழுந்தால் இப்பிடித்தான் நச்னு கதை ஐடியா கிடைக்குமா?கொஞ்சம் லேட்தான் ஆனாலும் பின்னூட்டம் போடாமல் இருக்க முடியலை.
அருணா

சென்ஷி on Saturday, March 22, 2008 11:52:00 PM said...

//அபி அப்பா said...
அனேகமா பரிசுக்கான கதை!!!//

நீங்க சொன்னா போதாதுன்னு நினைக்குறேன் :))

சென்ஷி on Saturday, March 22, 2008 11:53:00 PM said...

//SurveySan said...
:) பரிசு worthy :)//

அப்படியா... :))))

சென்ஷி on Saturday, March 22, 2008 11:55:00 PM said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஹாஹாஹா... நல்லா இருக்கு. ;-)//

நன்றி தங்கச்சி... :))

சென்ஷி on Saturday, March 22, 2008 11:56:00 PM said...

//Nithya A.C.Palayam said...
வித்தியாசமா யோசிக்கரீங்க,நன்றாக இருக்கு//

தேங்க்ஸ் நித்யா A.C. பாளையம் அவர்களே :)))

வித்தியாசமான பேரா இருக்கேன்னு பதிவ எட்டிப்பார்த்தா அங்க பேரு மட்டும்தான் இருக்குது.. :))

சென்ஷி on Saturday, March 22, 2008 11:56:00 PM said...

//துளசி கோபால் said...
நச்:-)))))//

தேங்க்ஸ் :))))

சென்ஷி on Saturday, March 22, 2008 11:57:00 PM said...

//cheena (சீனா) said...
உண்மையிலேயே இது வரை படித்த கதைகளில் இது தான் நச்சென்ற கதை - பரிசுக்குப் பரிந்துரைக்க வேண்டிய கதை.//

நன்றி சீனா சார்.....

சென்ஷி on Saturday, March 22, 2008 11:58:00 PM said...

//அறிவன் /#11802717200764379909/ said...
வித்தியாசமான சிந்தனை..
நல்ல குறுங்கதை...//

நன்றி அறிவன் ஐயா... :))

சென்ஷி on Saturday, March 22, 2008 11:59:00 PM said...

//aruna said...
ஆப்பிள் நச் நச்னு விழுந்தால் இப்பிடித்தான் நச்னு கதை ஐடியா கிடைக்குமா?கொஞ்சம் லேட்தான் ஆனாலும் பின்னூட்டம் போடாமல் இருக்க முடியலை.
அருணா//

பின்னூட்டம் வந்ததே பெரிய விஷயம்.. இதுல லேட்.. லேட்டஸ்ட்டுன்னு பிரிச்சு பார்க்கறது நல்லாவா இருக்கும். இருந்தாலும் நன்றிகள் :))

மங்களூர் சிவா on Thursday, March 27, 2008 12:53:00 AM said...

பதிவு இன்னைக்கு தேதில இருக்கு தமிழ்மணத்துல இன்னைக்கு வருது (27-03-2008) ஆனா கமெண்ட்டெல்லாம் டிசம்பர் 2007ன்னு இருக்கு!?!?!?


:)))))))

சென்ஷி on Wednesday, September 24, 2008 5:33:00 PM said...

//மங்களூர் சிவா said...
பதிவு இன்னைக்கு தேதில இருக்கு தமிழ்மணத்துல இன்னைக்கு வருது (27-03-2008) ஆனா கமெண்ட்டெல்லாம் டிசம்பர் 2007ன்னு இருக்கு!?!?!?
//

ஹி...ஹி.. இது மீள்பதிவுன்னு போட மறந்துட்டேன் அண்ணாச்சி.. :)

சின்ன தப்பால டேட்ட மட்டும் மாத்திட்டேன் :(

அதிஷா on Friday, February 13, 2009 5:24:00 PM said...

உங்களுக்கு பரிசு கிடைச்சுதா?

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com