Friday, April 11, 2008

என் இரண்டாம் காதலி.....



படித்து முடித்த மர்ம நாவலை மீண்டும் படிப்பதை விட கொடுமையானது இரண்டாம் முறை காதலிப்பது. எப்படியும் தெரிந்த முடிவுதான் என்ற போதிலும் காதலித்தலில் உள்ள சுவாரசியம் எப்படி தோற்கும் என்று தெரிந்து கொள்வதற்காக பொறுமை காப்பதுதான். ஆனால் முதல் காதலில் தோற்றபின் தாடி வளரும்வரை அவள் முகம் காணக்கூடாது என்று ஒளிந்து போகும் அசௌகரியம் இரண்டாம் காதலில் இருப்பதில்லை. இரண்டாமவளுக்கு, என் காதல் எப்படி தோற்றது என்ற ஞாபகக்குறிப்புகளை மன அகழ்விலிருந்து மெல்லிய விரல்களால் இதயம் வரை விட்டு பிராண்டியதில் நெஞ்சில் இரத்தம் கண்டு இரண்டு சொட்டு கண்ணீர் மட்டுமே அவள் கண்களில் மிஞ்சியது. அவள் விரல் நகத்தில் ரத்தம் பட்டுவிட்டதால் இப்படி வருத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தால் இதயத்தை கழட்டியாவது வைத்துவிட்டு வந்திருக்கலாமோ என்று தோணியது. அழகான மருதாணி என்று சமாளித்தலில் வலியை தீர்த்துக்கொண்டேன். ஆனாலும் புதியவள் மூத்தவளை அக்கா என்ற உறவுமுறையை கொண்டாடுவது எனக்கு தெரிந்த முடிவின் ஆரம்பமாகவே தோணியது. போடா! போய் ரெண்டு கூல்டிரிங்ஸ் கொண்டுவா என்று சத்தத்தின் முடிவிலும் எனக்கு ஐஸ்கிரீம் என்ற குயிலின் குரலுக்குத்தான் அவன் அமைதிப்பட்டு சென்றான் என்பது தனியாய் அவனிடம் சிக்கியபோது எனக்கு தெரிய வந்தது. அமைதியாய் இருந்திருக்கலாமோ..?! காதல் ஆராய்ச்சிக்குறிப்புகளை ஆரவாரத்துடன் வெளியிடலில் அவளது மௌனம் கலந்த சம்மதத்தில் கிடைத்த முத்தம் மட்டுமே மிச்சம். எச்சம் புனிதமாகிறது என்று எந்த புத்தன் சொல்லியிருப்பானென‌ தெரியவில்லை. நான் அன்று புனிதனாகியிருந்தேன்.

தனிமையை நான் ரசிக்க ஆரம்பித்தது எப்போது என்ற எந்த விவரணங்களும் என்னுடைய ஞாபகப்படிமங்களில் இல்லை. ஆனாலும் அவளுக்காக‌ தனியனாய் காத்திருந்த காலத்திலிருந்தே தனிமையை துணை கொண்டு விட்டேன். தனக்குள் பேசக்கற்றுக்கொள்வதை யோகம் என்று எந்த பைத்தியக்காரன் எழுதி வைத்தானோ. நான் அவளுடன்தான் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறேன். அவள் வந்து விடுவாள் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்த கவிதை இன்னும் முற்றுப்புள்ளிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அவளது நினைவை அழிப்பதற்காக எழுதப்படுகின்ற எல்லா கவிதைகளுமே அவள் நினைவைக் கொள்வதாக எண்ணி எழுத்துக்களை கொன்று தின்கின்றேன். ஆனாலும் எழுத்துக்கள் என்னை தவ்விப்பற்றி உடலெங்கும் சூழ்ந்து என்னை தின்ற ஆரம்பித்து விட்டன. ஒவ்வொன்றாக பிடுங்கி இழுத்துப்போட்டதில் அப்பாடா அவளும் தொலைந்து விட்டாள். அடுத்த கவிதைக்கான வார்த்தை கிடைக்கும் வரை நிம்மதியாய் இருக்கலாம்.


அவளுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. இனி அவளை காண்பது அரிதாகிவிடும். நினைவுகள் அதிகமாகிவிடும். மதுக்கிண்ணத்தை ஏந்துவதற்கான தேதி குறிக்கப்பட்டு விட்டது. மற்றவர்களை விட இவளுக்காக‌ ஒரு கோப்பை அதிகம் குடிக்க வேண்டும். என் காதலிக்கு திருமணம் என்ற செய்தி அவள் என்னை காதலித்த செய்தியை விட விரைவாய் வந்து சேர்ந்து விட்டது. அவளுக்காக கறுப்பு தாஜ்மஹாலை வரையத்தொடங்கிவிட்டேன். வரைந்து முடித்தப்பின் என்னை அதில் புதைத்து விடுங்கள். அதற்கும் அமர்ந்து அழவேண்டும் தனியனாக.


என் எல்லா காதலிகளும் காதலை கற்று மறக்கிறார்களோ இல்லையோ... காதலனை நன்றாகவே மறக்கத்தெரிந்திருக்கிறார்கள்.

டிஸ்கி : வவாச இரண்டு போட்டிக்காக

23 comments:

மங்களூர் சிவா on Friday, April 11, 2008 9:34:00 PM said...

/
என் எல்லா காதலிகளும் காதலை கற்று மறக்கிறார்களோ இல்லையோ... காதலனை நன்றாகவே மறக்கத்தெரிந்திருக்கிறார்கள்.
/

நச் நச் நச்!!!!

மங்களூர் சிவா on Friday, April 11, 2008 9:34:00 PM said...

/
Your comment has been saved and will be visible after blog owner approval.
/

என்ன இது சின்ன புல்ல தனமா???

கயல்விழி முத்துலெட்சுமி on Friday, April 11, 2008 9:58:00 PM said...

என்ன தைரியம் அனுபவம் நிகழ்வாம்ல .. இருக்கட்டும் இருக்கட்டும்..

வாழ்த்துக்கள்..
வெயிட்வ.வா. சங்கப்போட்டிக்காக வாழ்த்துக்கள்.. காதல் தோல்விக்கில்லை..
மூன்றுநான்குக்கும் சேர்த்து வச்சிக்க்லாம் இந்த வாழ்த்தை..

ஆயில்யன். on Friday, April 11, 2008 10:00:00 PM said...

//மெல்லிய விரல்களால் இதயம் வரை விட்டு பிராண்டியதில் நெஞ்சில் இரத்தம் கண்டு இரண்டு சொட்டு கண்ணீர் மட்டுமே அவள் கண்களில் மிஞ்சியது. அவள் விரல் நகத்தில் ரத்தம் பட்டுவிட்டதால் இப்படி வருத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தால் இதயத்தை கழட்டியாவது வைத்துவிட்டு வந்திருக்கலாமோ //

நல்லா இருக்கு இந்த இடம் :))

ஆயில்யன். on Friday, April 11, 2008 10:01:00 PM said...

//தனக்குள் பேசக்கற்றுக்கொள்வதை யோகம் என்று எந்த பைத்தியக்காரன் எழுதி வைத்தானோ. //

யோகம் என்ற இடத்தில் "பைத்திய"
பைத்திய என்ற இடத்தில் "யோக" போட்டாலும் நல்லா இருக்கும்ல :))

ஆயில்யன். on Friday, April 11, 2008 10:01:00 PM said...

//காதலிக்கு திருமணம் என்ற செய்தி அவள் என்னை காதலித்த செய்தியை விட விரைவாய் வந்து சேர்ந்து விட்டது//

:(((

ஆயில்யன். on Friday, April 11, 2008 10:01:00 PM said...

//என் எல்லா காதலிகளும் காதலை கற்று மறக்கிறார்களோ இல்லையோ... காதலனை நன்றாகவே மறக்கத்தெரிந்திருக்கிறார்கள்.//

(மாடரேஷனில் மாட்டகூடிய கமெண்ட் )



தப்பாக எடுத்துக்கொள்ளாவிட்டால்..........



காதலனுக்கு இன்னுமொரு புதிய காதலி கிடைக்க வாழ்த்துக்கள்!

தமிழன்... on Friday, April 11, 2008 11:35:00 PM said...

///என் எல்லா காதலிகளும் காதலை கற்று மறக்கிறார்களோ இல்லையோ... காதலனை நன்றாகவே மறக்கத்தெரிந்திருக்கிறார்கள்///

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே....

தமிழன்... on Friday, April 11, 2008 11:37:00 PM said...

///காதலிக்கு திருமணம் என்ற செய்தி அவள் என்னை காதலித்த செய்தியை விட விரைவாய் வந்து சேர்ந்து விட்டது///


வாழ்வே மாயம்...

தமிழன்... on Friday, April 11, 2008 11:41:00 PM said...

///மதுக்கிண்ணத்தை ஏந்துவதற்கான தேதி குறிக்கப்பட்டு விட்டது. மற்றவர்களை விட இவளுக்காக‌ ஒரு கோப்பை அதிகம் குடிக்க வேண்டும்///

ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே...

தமிழன்... on Friday, April 11, 2008 11:43:00 PM said...

//மெல்லிய விரல்களால் இதயம் வரை விட்டு பிராண்டியதில் நெஞ்சில் இரத்தம் கண்டு இரண்டு சொட்டு கண்ணீர் மட்டுமே அவள் கண்களில் மிஞ்சியது. அவள் விரல் நகத்தில் ரத்தம் பட்டுவிட்டதால் இப்படி வருத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தால் இதயத்தை கழட்டியாவது வைத்துவிட்டு வந்திருக்கலாமோ //


வலி...

செல்விஷங்கர் on Saturday, April 12, 2008 6:00:00 AM said...

நச்சென்ற இறுதி வரிகள். காதலனை மறப்பதற்கு காரணம் ஆயிரம். காதலனுக்குத் தெரியாத மர்மமே அது தான். போட்டீக்கான பதிவா ? வ.வா.ச சுட்டி கொடுக்க வில்லையே ??

கோபிநாத் on Saturday, April 12, 2008 1:54:00 PM said...

\\மதுக்கிண்ணத்தை ஏந்துவதற்கான தேதி குறிக்கப்பட்டு விட்டது.\\

விழா தேதியை பதிவில் குறிப்பிடமால் விட்டதற்க்கு என்னோட கடுமையான கண்டங்கள் ;))

கோபிநாத் on Saturday, April 12, 2008 1:56:00 PM said...

\\ஆயில்யன். said...
//மெல்லிய விரல்களால் இதயம் வரை விட்டு பிராண்டியதில் நெஞ்சில் இரத்தம் கண்டு இரண்டு சொட்டு கண்ணீர் மட்டுமே அவள் கண்களில் மிஞ்சியது. அவள் விரல் நகத்தில் ரத்தம் பட்டுவிட்டதால் இப்படி வருத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தால் இதயத்தை கழட்டியாவது வைத்துவிட்டு வந்திருக்கலாமோ //

நல்லா இருக்கு இந்த இடம் :))
\\

ஆயில்யன் அண்ணே அடுத்தவனுக்கு ரத்தம் வந்த இடம் உங்களுக்கு நல்லா இருக்கா!!??

எப்படிண்ணே இப்படி ஒரு கொலைவெறி ;))

கோபிநாத் on Saturday, April 12, 2008 1:56:00 PM said...

\\ ஆயில்யன். said...
//காதலிக்கு திருமணம் என்ற செய்தி அவள் என்னை காதலித்த செய்தியை விட விரைவாய் வந்து சேர்ந்து விட்டது//

:(((
\\

அண்ணே...லூசுல விடுங்க ;))

மங்கை on Saturday, April 12, 2008 10:14:00 PM said...

நல்லா இருக்குப்பா..

தனிமை..ஹ்ம்ம் நல்லா இருக்கு

அடப்பாவமே..."எல்லாக் காதலிகளுமா"....இந்த லட்சணத்துல கோப்பை எடுத்ததற்கு காதலி தான் காரணமா..

சென்ஷி on Sunday, April 13, 2008 9:36:00 PM said...

@ மங்களூர் சிவா...

நன்றி.. நன்றி.. நன்றி.... :))

சென்ஷி on Sunday, April 13, 2008 9:40:00 PM said...

@ முத்துலட்சுமி...

நீங்கள்லாம் தெகிரியத்துக்கு இருக்கும்போது நமக்கு என்னக்கா பயம் :))

வாழ்த்துக்களுக்கு நன்றி... :))


@ஆயில்யன்..

நன்றி ஆயில் சார்.. :))

//ஆயில்யன். said...
//தனக்குள் பேசக்கற்றுக்கொள்வதை யோகம் என்று எந்த பைத்தியக்காரன் எழுதி வைத்தானோ. //

யோகம் என்ற இடத்தில் "பைத்திய"
பைத்திய என்ற இடத்தில் "யோக" போட்டாலும் நல்லா இருக்கும்ல :))//

எப்படி போட்டா என்ன.. போனது போனதுதான்... :))

//காதலனுக்கு இன்னுமொரு புதிய காதலி கிடைக்க வாழ்த்துக்கள்!//

என்ன... அடுத்த பதிவுக்கு ரெடியாக சொல்றியாப்பா :))

சென்ஷி on Sunday, April 13, 2008 9:42:00 PM said...

@ தமிழன்...

:)) நல்லாருக்குங்க உங்க பாடல் பின்னூட்டம்.. எனக்கு ப்பிடிச்ச பாட்ட எல்லாம் போட்டுருக்கீங்க.. ஸ்பெஷல் தேங்க்ஸ் :))


@செல்விஷங்கர்..

சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்... சுட்டி கொடுத்துவிட்டேன் :)))

சென்ஷி on Sunday, April 13, 2008 9:43:00 PM said...

@ கோபிநாத்...

//விழா தேதியை பதிவில் குறிப்பிடமால் விட்டதற்க்கு என்னோட கடுமையான கண்டங்கள் ;)//

ஃபுல்லா அடிச்சப்புறம் விழுந்துதான் கெடப்பேன் மாப்ள.. அதுதான் விழா தேதின்னு தெரிஞ்சுக்க :))

சென்ஷி on Sunday, April 13, 2008 9:46:00 PM said...

@ கோபிநாத்...

//அண்ணே...லூசுல விடுங்க ;))//

எத... :))

@ மங்கை...

//அடப்பாவமே..."எல்லாக் காதலிகளுமா"....இந்த லட்சணத்துல கோப்பை எடுத்ததற்கு காதலி தான் காரணமா..//

இல்லக்கா.. காதலிகள் :)))

வெட்டிப்பயல் on Monday, April 14, 2008 7:57:00 AM said...

சென்ஷி,
ரொம்ப அருமையா இருக்கு...

//ஆனாலும் எழுத்துக்கள் என்னை தவ்விப்பற்றி உடலெங்கும் சூழ்ந்து என்னை தின்ற ஆரம்பித்து விட்டன. ஒவ்வொன்றாக பிடுங்கி இழுத்துப்போட்டதில் அப்பாடா அவளும் தொலைந்து விட்டாள்.//

இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

சென்ஷி on Friday, April 18, 2008 11:53:00 AM said...

//வெட்டிப்பயல் said...
சென்ஷி,
ரொம்ப அருமையா இருக்கு...

//ஆனாலும் எழுத்துக்கள் என்னை தவ்விப்பற்றி உடலெங்கும் சூழ்ந்து என்னை தின்ற ஆரம்பித்து விட்டன. ஒவ்வொன்றாக பிடுங்கி இழுத்துப்போட்டதில் அப்பாடா அவளும் தொலைந்து விட்டாள்.//

இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்//

நன்றி வெட்டிஜி :))

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com