
கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை
அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில்
அர்த்தமுணர நினைக்காது
வால் வளைத்து ஓரமாய்த்தான்
சுருண்டு படுத்துள்ளது
உணரலில்லாது நிதானமாய்
வரி தாண்டியிருக்கக்கூடும்
தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து
படம் உதவி : முத்துலெட்சுமி கயல்விழி




19 comments:
அருமை..
அறிவியல் புவியியல் மாதிரி இந்த அமர்வியலை இலக்கிய பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோருகிறேன்.. :)
பின் நவினத்துவம் என்று சொல்ல இருக்க வேண்டிய குறியும் பூனையும் இதில் வந்துவிட்டதால் இது பின் நவினத்துவம் வகைப்படும்!
//கவிதைக்கான குறியீடை//
//கொண்டது பூனை//
ஆகவே மீ தி எஸ்கேப்பு!!!
நல்லா வந்திருக்கு. பூனை கண்ணை மூடிக் கொண்டிருப்பதையும் வரிகளாக்கியிருக்கலாமே...
வாவ்....!!
கலக்கல்
அட்டகாசம்.
( நவீன விருட்சத்துக்கு அனுப்புங்க, விரும்பினால். கட்டாயம்தேர்வாகும். பூனை பற்றிய கவிதைகள் தொகுப்பு திரட்டி வருவதை அறிந்திருக்கலாம்)
ஏதோ புரியுற மாதிரி இருக்கு.....
ஆனாலும்......
நல்லாயிருக்குங்க மாப்பி சார் ;)
நல்லா வந்து இருக்கு சென்ஷி. வாழ்த்துக்கள்.
//குறியீட்டமர்வியல்"//
ஒரு புது வார்த்தை படித்து விட்டேன்!!!
அன்புடன் அருணா
நல்லா இருக்கு சென்ஷி.
//தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து
//
கவிதை அருமை. அழகான சொல்லாடல்
\\
சென்ஷி said...
டேய் மாப்ள...
ஒத்துக்கறேண்டா நீ இப்ப உண்மையிலேயே எளக்கியவாதிதான்.
\\
நானும்... :)
நல்லாருக்கு மாப்பி..!
பூனை, கவிதை, குறியீடு - வேறென்ன, நீங்களும் இ.வாதி தான். நல்லா இருக்கு சென்ஷி
அனுஜன்யா
@ முத்துக்கா..
நன்றிகள் பூனையின் பிரதிக்கும் :-)
@ குசும்பன்
:-))
@ மாதவராஜ்
நன்றிகள் பல..
@ ஆயில்யன்..
தேங்க்ஸ் ஆயில்ஸ் பாஸ் :)
@ முத்துவேல்..
நன்றி முத்துவேல்
@ தீப்பெட்டி..
அது அப்படித்தான் :-) நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும் தீப்பெட்டி
@கோபிநாத்
நன்றிகள்
@கே. ரவிஷங்கர்
நன்றிகள் ரவிஷங்கர்
@ அன்புடன் அருணா..
நன்றி அருணா
@வடகரை வேலன்.
நன்றி அண்ணாச்சி :-)
@ மின்னல்
நன்றிகள் பல மின்னல்
@ தமிழன் - கறுப்பி
:-)) நன்றி மாப்பி
@ அனுஜன்யா..
அவ்வ்வ் :-)). நன்றி தலைவா
ஹஹ்ஹஹ் ஹஹ்ஹஹ்
இது தான் பின்நவினத்துவ கவிதையோ?
செம கலக்கல்.. :)
Post a Comment