கோணம்
நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்
மௌனத் துரு
சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்
எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது
பதட்டம்
தோற்றத்தில் இனம்பிரித்துக்
காட்டாத குழந்தையின்
நனைந்த உள்ளாடை விலக்க எத்தனிக்கையில்
கூசிச் சிரித்துக் கைபொத்தித்
திகிலூட்டும் குழந்தை
கருணையின் ஊற்று
திறந்திருக்கும் கார் கண்ணாடி வழியே
தேய்வுற்றுக் கரைந்த
ரோகக் கை நீட்டி
இரைஞ்சும் கிழவிக்கில்லை
என் கருணையின் ஊற்றைத்
திறப்பதற்கான
துளிப் பிரயாசையும்
ஒரு பூ மலர
முன்பு
ஒரே ஒரு முறை
சந்தித்திருப்பின்
மொத்த வாழ்வையும்கூடப்
பணயம்வைக்காதிருந்திருக்கலாம்
கண நேரப் பொறுமை
இந்த மோசமான வார்த்தையை
விழுங்கிச் செரித்திருக்கும்
உரிய கவனமோ அக்கறையோ
இருந்திருந்தால்
சிதறியிருக்காது
இந்த நட்பு
சுவையற்ற நீண்ட காலம்
ஸ்தம்பிக்கிறது
கண நேர அவகாசங்களில்
இப்பூ மலர
ஒரு கணம் தாமத்திருந்தால்
இப்படி கனன்றுகொண்டிருக்காது
இல்லையா?
வன்மம்
வஞ்சம் படர்ந்த
நகரத்தின் தெருக்களில்
வெப்பம் மிதந்தலையும்
பேருந்தில்
வியர்த்து வழியும் உடல்களினூடே
எங்கோ துளிர்த்துப் பெருகிய வன்மமென
என்மீது நீளும்
ஓர் ஆண்குறி
உயிர்ப்பின் வெம்மை
முன் எப்போதோ
தன் பறத்தலிலிருந்து
நிலம் மீண்ட மயிலிறகு
ஒளிந்திருக்கிறது
என் குழந்தையின் புத்தக இடைவெளிக்குள்
தன் உயிர்ப்பின் வெம்மையோடு
அவனது கனவுகளை அடைகாத்தபடி
நீக்கமுடியாத வரிகள்
நீ அருகிலிருந்த வேளை
நிலைக்கண்ணாடிப் பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்
என் நினைவுகளில்
உன்னைப் பற்றிய வரிகளை
நீக்கிவிடச் சொல்லி மன்றாடுகிறாய்
உனக்குப் புரிவதில்லை
உன்னைப் பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மைகளை
இந்த மாலை
வேறெந்தப் பொழுதுகளையும்விடச்
சுமக்கவே இயலாதபடிக்கு
எப்படி இவ்வளவு கனத்துவிடுகிறது
இந்த மாலை
மாதவிடாய் ஈரம் நிரம்பிக்
கனக்கிற பஞ்சைப்போல
மெழுகுச்சுடர்
நீங்களில்லாத பொழுதில்
உங்களைப் பற்றிய வருத்தங்களோடு
ஓரிடம் தேடிப்போவேன்
நானில்லாத சமயங்களில்
நீங்களும் அப்படித்தான்
நாமிருவர் பேசிக்கொள்கையில் மட்டும்
கூச்சமின்றி வளர்த்தெடுக்கின்றோம்
பிரியங்களால் மெழுகிய ஒரு சுடரை
கவிதைகளின் மூலம் : பச்சை தேவதை (கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர் : சல்மா
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
மேலும் சில எனக்குப் பிடித்த கவிதைகள் காண
முதல் தொகுப்பு
இரண்டாம் தொகுப்பு
Friday, May 08, 2009
Subscribe to:
Post Comments (Atom)




42 comments:
தல எல்லாமே அருமையா இருக்கு!
இரண்டு பதிவா இட்டிருந்தால், இன்னும் சுவைத்து மகிழ்ந்திருப்பேன்!
அண்ணே டக்கராக்கீது எல்லா கவிதையும் !
:)
எனக்கு பிடிச்சது
எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது
வெளவால் பற்றிய கவிதை சூப்பர்
அனைத்ததும் அருமை ;)
மாப்பி எல்லாமே நல்லாருக்கு! எங்கயிருந்து படிக்கிற எல்லாத்தையும் புத்தகங்களை எனக்கும் கொடுய்யா...
\\
மௌனத் துரு
சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்
எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது
\\
இதன் சாயல்களில் என்னிடமும் இருக்கிறது சில வரிகள்...
வணக்கம்
சல்மா ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருந்த கவிதாயினி
நீங்கள் பதிந்திருக்கும் எல்லா கவிதைகளும் அட !.... பொடவைக்கின்றன
\\திறந்திருக்கும் கார் கண்ணாடி வழியே
தேய்வுற்றுக் கரைந்த
ரோகக் கை நீட்டி
இரைஞ்சும் கிழவிக்கில்லை
என் கருணையின் ஊற்றைத்
திறப்பதற்கான
துளிப் பிரயாசையும்\\
அப்படியே என்னை எழுதியது மாதிரி இருக்கின்றது.
நன்றி
இராஜராஜன்
எல்லாம் நன்றாக உள்ளது...
முதலாவது தான் எனக்கு மிகவும் பிடித்தது...
பகிர்வுக்கு நன்றி நண்பா...
எல்லாமே நல்லா இருக்கு சென்ஷி. ஆனால், ஒரு ஐந்து கவிதைகளுக்கு மேல் ஒரே சமயம் படிக்க முடிவதில்லை என்னால். நல்ல கவிதை சோடா இல்லாத .... என்ன நினைத்தாய்? தண்ணீர் போல. ஐந்து கிளாசுக்கு மேல் ஒரே சமயம் குடிக்க முடியாது :)
நன்றி சகா.
அனுஜன்யா
@ வால் பையன்
இரண்டு பதிவாக போடுவது வசதிப்படுமென்றாலும் எதைவிடுவது என்ற ஆதங்கத்திலேயே எழுத வேண்டியதாகி விட்டது. இன்னும் சில பெரிய்ய கவிதைகளை மனம் கனக்கச்செய்து விட வேண்டியதாகி விட்டது :-)
கோணம் , மெளனத்துரு மிக நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி
நன்றி ஆயில்யன் :-))
:-)) முதல் வருகைக்கு நன்றி கவிதை காதலரே!
நன்றி கோபிநாத்..
@ தமிழன் கறுப்பி
சர்வம் அய்யனார் மயம் :-))
உனது கவிதைகளையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
முதல் வருகையென நினைக்கின்றேன் நன்றி இராஜராஜன் :-))
//வேத்தியன் said...
எல்லாம் நன்றாக உள்ளது...
முதலாவது தான் எனக்கு மிகவும் பிடித்தது...
பகிர்வுக்கு நன்றி நண்பா...
//
தங்களின் வாழ்த்துக்கள் வழியே சல்மாவுக்கு முழு பாராட்டுதல்களும் சேரட்டும் :))
@ அனுஜன்யா...
சில நல்ல கவிதைகளை வாசிக்கும்போது எதை விடுவது என்ற குழப்பத்திலேயே எல்லாவற்றையும் ஏற்றும் மனப்பாங்கு வந்து விடுகின்றது.
போதை எப்படி ஏறினாலென்ன.. எப்படியும் தெளியத்தெளிய தண்ணீர் ஊற்றிக்கொள்ளத்தான் வேண்டுவது :))
// அமுதா said...
கோணம் , மெளனத்துரு மிக நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி
//
நன்றி அமுதா...
அத்தனையும் அழகு...சற்றே மனம் கனக்கிறது சில வரிகளை படிக்கும் போது..
நெம்ப அருமையான கவிதைகளுங்கோ ...!!! நெம்ப சூப்பர்...!! ஆனா நானு ஒன்னுதான் படுச்செனுங்கோவ் ..!!! எனக்கு அவ்ளோதான் கெப்பாசிட்டி....!!! கைவசம் நெம்ப கவிதை வெச்சிருப்பீங்கலாட்ட .....??? ஒட்டுக்காலும் அஞ்சு கவிதைய போட்டு தாக்கீடீன்களே....???
எப்புடியோ .... கஷ்ட்டப்பட்டு எல்லா கவிதையும் நா இன்னைக்கே படுசிட்டு வந்து .... உங்ககிட்ட டவுட்டு கேக்குறேன்....!!!
வாழ்த்துக்கள்....!! வாழ்க வளமுடன்....!!!!
வருகைக்கு நன்றி கயல்விழி நடனம்!
ஆம்///
பின்னூட்டக் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா... இது சல்மா என்ற பெண்கவிஞரின் பச்சை தேவதை என்ற தொகுப்பிலிருந்து எடுத்து எழுதப்பட்டது,
தங்களின் சந்தேகத்தை கண்டிப்பாய் கேட்கலாம். எனக்கும் தெரிந்திருந்தால் கண்டிப்பாய் கூறுவேன் :))
தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி
அருமையான தொகுப்பு சென்ஷி. நீங்கள் ஒரு சபரிக் கிழவி
//முரளிகண்ணன் said...
அருமையான தொகுப்பு சென்ஷி. நீங்கள் ஒரு சபரிக் கிழவி
//
நன்றி முரளி...
அதென்னது சபரிக்கிழவி??? சுத்தமா புரியலை :-((
சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்
Ungalukku piditha kavithaihal nalla irukku-konam & vavvaal super.
சென்ஷி,
ராமாயணத்திலே ஒரு காட்சி.
ராமன் வனவாசம் இருக்கும்போது, அந்த காட்டில் ஒரு கிழவி இருந்தாள்.அவள் பெயர் சபரி.
ஒருமுறை ராமனுக்கு அவள் நாவல்கனிகளைக் கொடுக்கவந்தாளாம்.
எந்த கனி கொடுப்பதாக இருந்தாலும் ஒரு முறை கடித்து, சுவைத்து பார்த்து பின் ராம்னிடம் கொடுப்பாளாம்.
காரணம், நம் ராமனுக்கு நல்லதே கொடுக்க வேண்டுமென.
அதுபோல நீங்களும் சுவைத்து நன்றாக இருப்பவற்றை மட்டும் வாசகர்களுக்கு பரிமாறுகிறீர்கள்.
மூன்று பகுதியும் அருமையான கவிதைகள்.
அதனால்தான் உங்களை சபரிக்கிழவி என விளித்தேன்.
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
உங்களுக்கு பிடித்த இந்த கவிதைகள் எனக்கும் பிடித்தன !!!
அனைத்து கவிதைகளுமே சூப்பர்,பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி சென்ஷி!!
//ஆயில்யன் said...
அண்ணே டக்கராக்கீது எல்லா கவிதையும் !
:)
எனக்கு பிடிச்சது
எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது//
Repeatuuuuuuuuuuu... :)))))))))))))
//Kavi kilavan said...
சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்
//
:-))
முதல் பின்னூட்ட வருகை.. நன்றி கவிநிலவன். அழகானபெயர்!
//Muniappan Pakkangal said...
Ungalukku piditha kavithaihal nalla irukku-konam & vavvaal super.
//
:-))
சரியான கிவ் அன் டேக் பாலிசி யூஸ் பண்றீங்க தலைவரே!!!
@ முரளி கண்ணன்..
கண்கள் பனிக்கிறது.. நெஞ்சம் நெகிழ்கிறது.. டைப்படிக்கிறது அவ்ளோ பெரிய நல்ல விசயமா இப்பத்தான் உங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் உங்க வாழ்த்தை ஏத்துக்கிறேன். அடுத்த கவிதைகள் உங்களுக்காக சிறப்பு பதிவா தரப்படும் :-))
//இது நம்ம ஆளு said...
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
//
நீங்க கமெண்ட் போட்ட அன்னிக்கே வந்து பார்த்தேன். கடைய தொறக்காம வச்சிருந்தீங்க. இப்ப மறுக்கா வந்து பார்க்குறேன் தலைவா. நன்றிகள் பல :-))
//அரவிந்தன் said...
உங்களுக்கு பிடித்த இந்த கவிதைகள் எனக்கும் பிடித்தன !!!
//
ரொம்ப நன்றி அண்ணா. முதல் வருகைன்னு நினைக்குறேன். :)
//Mrs.Menagasathia said...
அனைத்து கவிதைகளுமே சூப்பர்,பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி சென்ஷி!!
//
நன்றிங்க.. சமையல் குறிப்புகளை அழகா புகைப்படத்தோட தர்ற ஒரே ஆளு இப்போதைக்கு நீங்கதான் :)
அதற்கும் என் நன்றிகள்!
//ஸ்ரீமதி said...
//ஆயில்யன் said...
அண்ணே டக்கராக்கீது எல்லா கவிதையும் !
:)
எனக்கு பிடிச்சது
எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது//
Repeatuuuuuuuuuuu... :)))))))))))))
//
நன்றி ஸ்ரீமதி.. வருகைக்கும் ரிப்பீட்டுக்கும் :))
அண்ணா அனைத்தும் அருமை!
முதல் கவிதை பிரமாதம்:)
நல்ல பகிர்வு... இது போல் நிறைய தாருங்கள்..
நீங்க எழுதியது போலவே இருந்தது!!
கடைசியில் சல்மா?
Post a Comment