Wednesday, November 18, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா

36 comments
Photobucket

முப்பெரும் விழாவாய்
250 பதிவுகள்
மூன்று வருடங்கள் மற்றும்
இன்று
(19-11-2009)
பிறந்த நாள் காணும்
எங்கள் முத்துக்காவிற்கு
இனியதான பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவண்

பதிவுலக அன்புத் தம்பிகள்

.
.

Friday, November 06, 2009

அமீரக பதிவர் இன்பச்சுற்றுலா - பதிவர் விவரங்களுடன்

44 comments
நெடுநாட்களுக்குப் பிறகான சிறப்பான ஒரு சுற்றுலாவாக அமைந்தது அமீரகப் பதிவர்களுடனான கோர்ஃபக்கான் சென்ற நிகழ்வு... மிகக்குறுகிய அவகாசத்தில் எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று நல்லபடியாக நடத்திக் கொடுத்து மீண்டும் அண்ணாச்சி மற்றும் கீழை ராசா மனதைக் கவர்ந்தார்கள். 17 பதிவர்கள். அதில் இருவர் புதியதாய் பதிவு படிக்க ஆரம்பித்தவர்கள். அத்தனை பேரையும் ஒன்றிணைத்து கொண்டு சேர்த்த தமிழுக்கு சத்தமாய் நன்றி சொல்லத் தோன்றுகிறது.

கலந்து கொண்டவர்கள்

1. ஆசிப் மீரான் - ஷார்ஜா
2. கீழை ராசா - துபாய்
3. கிளியனூர் இஸ்மத் - துபாய்
4. சந்திரசேகரன் - துபாய்
5. லியோசுரேஷ் - ஷார்ஜா
6. ஆசாத் - துபாய்
7. சுல்தான் - ஷார்ஜா
8. முகவை முகில் - துபாய்
9. நான் ஆதவன் - ஷார்ஜா
10. கோபிநாத் - ஷார்ஜா
11. ஹக்கீம் - துபாய்
12. கமால்கான் - துபாய்
13. செந்தில்வேலன் - ஷார்ஜா
14. கலையரசன் - ஷார்ஜா
15. கார்த்திக்கேயன் - ஷார்ஜா
16. நாஞ்சில் பிரதாப் - பர்துபாய்
17. சென்ஷி - ஷார்ஜா

ஓட்டுனர் - நவாஸ்கான்

பர்துபாயிலிருந்து பிரதாப்பை ஏற்றிகொண்டு கிளம்பிய பேருந்து துபாயில் ஷார்ஜாவாசிகளைத் தவிர்த்த மற்ற அனைவரையும் பிரியாணி சகிதமாய் கூட்டிக் கொண்டு வந்தது. பிரியாணித் தயாராக 20 நிமிடம் ஆகுமென்று தகவல் கூறியதால் பிரியாணி இல்லாமல் பயணம் கிளம்புவதில்லை என்ற உறுதியும் இருந்ததால் காத்திருந்து ஷார்ஜாவில் வண்டி ஏறினோம்.

முன்கூட்டியே நிகழ்வுகளை உடனுக்குடன் படம் பிடித்து ஏற்றுவதாய் முடிவு செய்திருந்ததால் ஆசிப் அண்ணாச்சியின் மொபைல் இண்டர்நெட் கனெக்சனும் கூடவே கார்த்திக்கேயனின் மடிக்கணிணியும் செந்தில் வேலனின் பிளாக்பெர்ரி மொபைலும் பதிவுகள் இட பேருதவியாய் இருந்தது. வீடியோ ஃபைலை உடனே பதிவில் ஏற்ற சிரமம் இருந்ததால் அதனை தனியாக யு டியுபில் ஏற்ற முடிவு செய்தோம்.

ஷார்ஜாவில் பஸ் ஏறியபின் பதிவர் குழுமம்


பதிவர் பெயர்கள் : இடமிருந்து வலமாக

நாஞ்சில் பிரதாப், சந்திரசேகரன், லியோசுரேஷ், செந்தில்வேலன், (பின்னால்) சுல்தான், கலையரசன், நான் ஆதவன், கார்த்திக்கேயன், சென்ஷி (மடிக்கணிணியுடன்), கோபி, ஆசிப்மீரான், கமால்கான், கிளியனூர் இஸ்மத், கீழை ராசா, முகவை முகில்




இதில் நாஞ்சில் பிரதாப்பிற்கு முன்னால் தொப்பியுடன் அமர்ந்திருப்பது ஹக்கீம்


ஷார்ஜாவிலிருந்து ஒரு மணிநேர பயண தூரத்தில் இருந்த ஃபிரைடே மார்க்கெட் என்ற இடத்தில் குளிர்பானம், டீ அருந்த நிறுத்தியபோது எடுத்த படம்.

கோர்ஃபக்கான் சேரும் முன்பே தொழுகைக்கான நேரம் நெருங்கியதால் இடையில் ஃபுஜைரா என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி, தொழுகைக் கடமையை முடித்துவிட்டு கோர்ஃபக்கானை அடைந்ததும் முதல் வேலையாய் பிரியாணி உண்பதற்காக ஒரு நல்ல இடத்தை முடிவு செய்துக்கொண்டு பிரியாணி சாப்பிட ஆரம்பித்தோம்.


பிரியாணியை அளவில்லா சந்தோசத்துடன் பகிர்ந்தளிப்பது கிளியனூர் இஸ்மத்

இடையில் வினோத் கவுதம் அல் அய்னிலிருந்து ஃபுஜைராவுக்கு வந்துவிடுவதாய் தொலைபேசியிருந்தும் சரிவர வாகன வசதி அமையாததால் எங்களுடன் வந்து சேர இயலாத வருத்தம் இருந்தது.

பிரியாணி உண்ட களைப்பால் (எம்மாம் பெரிய சட்டி நிறைய பிரியாணி) பத்து நிமிடங்கள் ஓய்விற்குப் பிறகு கிரிக்கெட் போட்டி விளையாட முடிவு செய்யப்பட்டது.


ரெஸ்ட்டு எடுக்கறவங்க கார்த்திக், ஆசாத், லியோசுரேஷ்

கீழைராசா ஒரு அணியாகவும், அண்ணாச்சி இன்னொரு அணியிலும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது.

வெற்றி தோல்வியெல்லாம் வீரனுக்கு ஜகசம் என்ற சொல் இருப்பதால் வெற்றியை அண்ணாச்சிக்கு விட்டுக் கொடுத்து கீழை ராசா அணியினர் வீரமானவர்கள் என்ற பட்டத்தை தட்டிச் சென்றது.


வெற்றிகரமான பதிவர் கிரிக்கெட் போட்டிக்குப் பின் படகுச் சுற்றுலா செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் படகு சுற்றுலா செல்லத் தொடங்கியது.


லைஃப் ஜாக்கெட் மேல் தோளில் சிவப்புத் துண்டு போட்ட ஆசிப் அண்ணாச்சியுடன் செந்தில்வேலன்

படகு சவாரிக்குப் பிறகு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அலைகள் இல்லாத அந்த கடலில் இறங்கி குதியாட்டம் போட்டுக் கொண்டாடினர். அந்த புகைப்படம் மற்றப் பதிவர்களின் மனநலம் கருதி பதிவேற்றுதல் தடை செய்யப்பட்டு விட்டது.

குளித்து கரையேறி பேசி சிரித்து அமர்ந்து கொண்டாட்டம் போட்டு கூட்டத்தை வேடிக்கைப் பார்த்து தனியே அம்மாவைத் தேடி சுற்றிக் கொண்டிருந்த குழந்தையை பத்திரமாய் அம்மாவிடம் சேர்த்துவிட்டு (கலை மற்றும் கோபி) மீண்டும் இருட்டுவதற்குள் கிளம்பியாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் பேருந்தில் மனமின்றி ஏறியமர்ந்தோம்.


பேருந்தில் திரும்பியபோது எல்லோரும் பாட ஆரம்பித்து பின் எதிர்ப்பாட்டு என களை கட்ட ஆரம்பித்தது. அண்ணாச்சியின் குரலினிமையை மிக அற்புதமாக ரசிக்க முடிந்தது. இனிமையான குரலுடன் இணைந்த முகில், ஆசாத், சந்திரசேகரன் என கும்பல் களைகட்ட இவர்களுக்கான எதிர்பாட்டில் மிக சுவாரஸ்யப்படுத்திக் கொண்டிருந்தனர் கலை, கோபி, ஆதவன் மற்றும் கார்த்திக். யாரும் எதிர்பாராத வகையில் காதல் ஓவியம் படத்திலிருந்து ஒரு பாடலை முழுமையாக சுல்தான் பாடி அசத்தினார்.

மற்றவர்களும் பதிவிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் பதிவு பெரிதாகிக் கொண்டே போவதாலும் பேருந்தில் செல்லும்போது நடந்த பாட்டுக்குப் பாட்டு, பதிவர் ஜெசிலா பயணம் இனிமையாக வாழ்த்து கூறியது, திரும்பும்போது பினாத்தல் சுரேஷ் போன் செய்தது, பிரியாணியுடன் கிடைத்த கத்தரிக்காய் பச்சடி, படகை பேருந்து போல தண்ணீரில் இறங்கி தள்ளிய அனுபவம், கிரிக்கெட் போட்டியில் உடம்பை ஸ்டம்பாக்கி அடி வாங்கிய அனுபவம், முன்னால் போட வேண்டிய பந்தை வேகமாக ஓடிவந்து தனக்கு பின்னால் பவுலிங்கிய பதிவர், எளிமையாய் எல்லாப் பந்தையும் அடித்து ஆடி மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கியவர் பற்றிய விவரம், முகிலின் அட்டகாச மோனோ ஆக்டிங்க் மற்றும் மிமிக்ரி கும்மி, யுகபாரதியுடனான ஆசாத்தின் அனுபவம் பற்றிய பகிர்வு மற்றும் அதிகமாய் கைதட்டல் வாங்கிய கெட்ட வார்த்தைக் கதைகள் பற்றிய குறிப்புகளை இங்கு பகிராமல் விடுகின்றேன்.
.
.

கடலினக்கரே போனோரே...!

5 comments
அமீரக மெரீனாவான கோர்ஃபக்கானில் பதிவர் கும்பல்



நாங்கல்லாம் போட்ல ஏறப்போறோமே...!



லாலாக்குடோலுடப்பி டோலுமய்யா டோலு!



கடலினக்கரே போனோமே...!




தாலாட்டுதே வானம்...!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com