Tuesday, June 30, 2009

பிரமிடுகள்

45 comments


சௌக்கியம்
சாப்பிட்டேன்
விசேஷமாய் ஏதுமில்லை
அனைவரும் சுகம் - பணியும் நலம்
நேரமில்லை
அப்படியா!
சரி மற்றும் ம்
வார்த்தை அடுக்குகளில்
பொய்களைப்போல் எளிதில் கிட்டுவதில்லை
புன்னகைகள்.

.....

Wednesday, June 24, 2009

எனக்குப் பிடித்த கவிதைகளில் சில.. - 5

41 comments
எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறோம்.

===============================

செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகுநேரம் நின்று வாங்கிய
ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமைபேசுவேன்.
தம்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்து கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டுவருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்.
தோழிகளற்ற
பின்வரிசையி லமர்ந்து
தெரியாமல் அழுவேன்.
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று.

=====================================

யோனிகளின் வீரியம்

பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன்குறி மறைந்துபோகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்.

====================================

கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்ப்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கைநழுவிப் போகின்றன.

====================================

மெல்லிய
புலால் நாற்றம் வீசுகின்ற
நானும்
தசைகளை முற்றாகப்
பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்
என் வீடும்
கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி
பறையொலி பழகும்
விடலைகள் நிறைந்த
என் தெருவும்
ஊரின் கடைசியில் இருப்பதாக
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
முதலில் இருப்பதாக.

====================================

ஏவாளின் கனியும் ஆதாமின் அறுவடையும்

திருப்தியான கூடலின் லயத்தோடு
பறவைகள் சதா சப்தித்துக் கொண்டிருந்தன
பருவப்பீய்ச்சல்களிலும் உறுப்புகளின் இச்சையற்று
விலங்குகள் அலைந்து திரிந்தன.
அழைக்கப்படாத மரங்களின் காம்புகள்தோறும்
தளர்ந்த முலையின் சாயலையொத்த பழங்கள்.
வெளிச்சத்தின் நிழலில் ஒளி அமர்ந்திருந்த
அவ்விடம் மிகவசீகரமாய் விளங்கிற்று.
அதனை நிர்மாணித்தவன்
சுனைகளின் அடைப்பைச் சரிசெய்யப் போயிருந்தான்.
நஞ்சுக்கொடியின் முதல்சுவையை அலகிலேந்தி
அவளை ரகசியமாய் சமீபித்தது
வேறு எப்படியும் உருக்கொள்ள இயலாத ஸர்ப்பம்.
விரகத்தின் வேர்வை அவனுள் அரும்பத்தொடங்க
அவனுக்குப் பழக்கினாள்
தன்கனிகளைச் சுவைக்கும் உடல்நுட்பம்
அதன்பின் காமத்திற்கான அறுவடை
அவனுக்கென்றாகிப் போனது.

=================================

ஆசிரியர் : சுகிர்தராணி
தொகுப்பு : இரவு மிருகம்
காலச்சுவடு பதிப்பகம்

=================================

மேலும் சில, எனக்குப்பிடித்த கவிதைகள் வாசிக்க..

எனக்குப் பிடித்த கவிதைகள் - 1
எனக்குப் பிடித்த கவிதைகள் - 2
எனக்குப் பிடித்த கவிதைகள் - 3
எனக்குப் பிடித்த கவிதைகள் - 4

Sunday, June 21, 2009

ஒரு பரி’சோதனை பதிவு!

62 comments

கண்ணால் காண்பதும் மொக்கை
காதால் கேட்பதும் மொக்கை
அடச்சே,
தீர விசாரிச்சுப் பார்த்தாலும் மொக்கை
அருமை அண்ணாத்த
கே.ரவிஷங்கரின் மொக்க சோதனைக்கு
படு மொக்க எதிர்வினை

Friday, June 19, 2009

அண்ணாகண்ணனும் மீராஜாஸ்மினும் பின்னே ஞானும்

69 comments

பதிவர் அண்ணாகண்ணன் இன்று ஒரு பதிவிட்டு இருந்தார்..

முதலாவது மீரா ஜாஸ்மின் தோன்றும் சக்ரா கோல்டு விளம்பரம். அவரது விமர்சனத்தை படித்து அங்கேயே கருத்து கூறவும். மற்ற மீராவின் ரசிகர்களுக்கான பத்தி கீழே.......

இதுவரை இவர் கூறிய விளம்பரத்தினை நான் பார்க்கவில்லை. அதற்காக பதிவர் அண்ணாகண்ணனுக்கு மிக்க நன்றி.ரசிகக்கண்மணிகளும் இதைப்பற்றிய விவரங்களை என்னிடம் சொல்லாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை. இருப்பினும் அதே விளம்பரத்தை தேடும்போது கிடைக்கவில்லை.

ரசிகர்களின் மனம் கோணாது இருக்க நம் தங்கத்தாரகை மீரா நடித்த அதே சக்ரா கோல்டின் வேறு ஒரு விளம்பரத்தை எடுத்து இங்கு பதிகிறேன்.

அந்த விளம்பரத்தின் ஒளித்துண்டு அடங்கிய யுஆர்எல் இணைப்பு யாரேனும் தந்துதவினால் அகில உலக மீரா பேரவையின் சார்பாய் வாழ்த்துப்பா அல்லது அவர்களது பதிவினில் கும்மி அடிக்கப்படும்.




புரிந்துணர்விற்கு நன்றி!!!!

இங்ஙனம்

மீரா பேரவை

Thursday, June 18, 2009

மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?

121 comments











































































































































அளவில்லாத மொக்கையுடன்
சென்ஷி

Tuesday, June 16, 2009

32

48 comments
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வலைப்பதியணும்னு நினைச்சு புனைப்பெயர் யோசிச்சப்ப நாகேஷ், சார்லி இது ரெண்டுதான் என்னோட முதல் விருப்பமா இருந்த்து. இந்த வலைப்பதிவுல நண்பன் செந்திலையும் பங்கெடுத்துக்க வைக்கணும்ங்கற விருப்பத்துல அவனோட பெயரையும் சேர்த்து சென்ஷின்னு வைச்சேன். இந்த பெயர் மற்றும் குருவின் புகைப்படத்தால் நிறைய்ய நண்பர்கள் கிடைச்சதால இந்தப் பெயரும் பிடிக்கும்.

என்னோட உண்மையான பெயர் பல பழைய பதிவர் நண்பர்களுக்கு தெரியும். என்னோட பெயர் ஷேக் ஜபருல்லாஹ்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

இரண்டு வாரங்களுக்கு முன்பு.. ஹோட்டல் ருவாண்டா திரைப்படம் பார்த்துட்டு இருந்தப்ப. சட்டுன்னு உடையறதும் பின்ன மறுபடி கோர்த்து எடுக்கறதும் எனக்கு வழக்கமாகிடுச்சு.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ம். பல சமயங்கள்ல இது எனக்கு கை கொடுத்திருக்குது. கவிதைங்கற பேர்ல முன்னே நோட்ல எதை கிறுக்கிக்கொடுத்தாலும் நல்லாயிருக்குன்னு சொன்ன தோழி ‘கையெழுத்த சொன்னேன்டா’ன்னு கலாய்க்கற அளவுக்கு எழுதி எழுதி கொடுமை செஞ்சிருக்கேன். அப்புறம் சென்னையில வேலையில்லாம இருந்தப்ப ஒரு திரைப்பட நிறுவனத்துக்கு அவங்க கலந்தாலோசிக்கற திரைக்கதை, வசனத்தை தெளிவா புரியறா மாதிரி பேப்பர்ல எழுதி கொடுத்துட்டு இருந்ததுக்கும் கையெழுத்து நல்லாயிருந்ததுதான் காரணம்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

4. பிடித்த மதிய உணவு என்ன?

வீட்டில் சமைத்துக் கொடுக்கும் அசைவ உணவு எல்லாமே.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ம். என்னுடைய நட்பு உடனே கிடைக்கும். ஆனால் அதைவிட வெகு சீக்கிரமாவே முறிஞ்சும் போயிடும். என்னோட சுபாவம் அப்படி. அதனால நட்பு கிடைப்பதை பற்றியோ அது இழப்பதை பற்றியோ இப்போதெல்லாம் கவலைப்படுவது இல்லை. பழகி விட்டது அவ்வளவுதான்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கிணறுடன் இணைக்கப்பட்ட மோட்டார் பம்புதான் எனது முதல் சாய்ஸ்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

பொதுவா யாரா இருந்தாலும் முகத்தை பார்த்துப்பேசித்தான் பழக்கம். முகத்துல எதை பார்ப்பீங்கன்னா மூக்கைதான் பார்ப்பேன்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் எதையும் மனசுல வச்சுக்காம பேசிடறதுதான்.

பிடிக்காத விஷயம் சோம்பேறித்தனம். அதுவும் அதிகமாகி இப்ப அலட்சியப்போக்கா மாறிடுச்சு.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்வி திருமணம் ஆனவர்களுக்காக. அதனால இதுக்கு நான் பதில் தரப் போறதில்லை. திருமணம் ஆகியிருந்தாலும் தந்திருக்க மாட்டேன்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அதிகம் தனிமை விரும்பியா இருக்கறதால அப்படி யாரும் இல்லாம போறதுக்கு வருந்தலை.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கறுப்பு நிற டீ சர்ட், கிரீம் கலர் பேண்ட்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அலுவலகத்தில் இருக்கேன். சில பதிவுகளை, தமிழ்மணத்தைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீலம்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

14. பிடித்த மணம்?

சந்தனம்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1. மோனி புவன் அம்மா - 2. நான் ஆதவன் - 3. சோம்பேறி - மூவருமே நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் என்பதுதான்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

1. ரங்கன் - தன்னம்பிக்கை பதிவுகள். பட்டாம்பூச்சி சொல்லித்தந்தது
2. நாணல் - பல கவிதைகள்
3. ஸ்ரீதர் நாராயணன் - வித்தியாசமான கதைகள். ரொம்பப் பிடித்தது இப்ப சமீபத்தில் சங்கமம் பரிசு பெற்ற “எரணைக்கல் மோதிரம்”

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

17. பிடித்த விளையாட்டு?

கேரம்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

எல்லாப்படத்தையும் பார்க்கும் வழக்கம் உண்டு. நகைச்சுவைப்படங்கள் ரொம்ப ரசித்துப் பார்ப்பது உண்டு. சில படங்கள் மொக்கையாவே இருக்குன்னு விமர்சனம் படிச்சாலும், பார்த்துட்டு ஆமாம்ய்யா படு மொக்கைன்னு சொல்லத்தான் ரொம்பப் பிடிக்கும்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

20. கடைசியாகப் பார்த்த படம்?

தினமும் ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி டிவிடியில ஏதாவது படம் பார்க்குற பழக்கம் உண்டு. அந்த வகையில இந்த கேள்வி, பதில்ல மொக்கைப்படம் பேரு வந்துடக்கூடாதுன்னு நேத்து பார்த்தது சார்லி சாப்ளினின் “ தி சர்க்கஸ்” மற்றும் “தி கிட்” (The Circus & The Kid). இரண்டு படங்களும் சுவாரஸ்யமானவை.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

21. பிடித்த பருவ காலம் எது?

ஊரில் இருக்கும்போது மே மாதம் தவிர எல்லாமே. அமீரகத்தில் குளிர்காலம்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

அலுவலகத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் “யாமம்”. அறையில் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதும் மாற்றுவதில்லை. பிடித்தமான பூனையின் படம்தான் எப்போதும் இருக்கும்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

குழந்தைகள் போடும் எல்லா சத்தமும் பிடிக்கும்.

வாகன இரைச்சல் பிடிக்காது.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தமிழ்நாட்டில் - ஹோசூர்
இந்தியாவில் - டெல்லி
வெளிநாடுகளில் - இப்போதைக்கு ஷார்ஜா

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ம். இருக்கிறது.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அட்வைஸ் செய்யறது.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

குடந்தை மகாமகக்குளம்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே இருந்தால் போதும்ன்னு தான் எப்பவுமே தோணும்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

ப்ச்ச்ச்ச்ச்ச்...

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரியில முடிஞ்சுடாத அளவு வாழ பார்ப்போம்.

Friday, June 12, 2009

காக்கா

50 comments
எதிர்வினை கவுஜையின் ஒரிஜினல் vsop யை காண


பறவைகள் அலையும் வானத்தில்
காக்காய் மாத்திரம் தனித்து தெரிகிறது
வடாம் காய விரட்டிய காக்காவை
தேடியது பக்கத்துவீட்டு ஃபிகர்
சாப்பாடு மிகுந்தால்
கா..கா.. என்று கத்த
துணை புரிந்த சிரிப்பில்
பழகிப்போன ஒரு சாயங்கால வருகையின்
ஆரம்பத்தில் கேட்டேன்
காக்காவின் பெயரென்ன
த்தூவென்று துப்பிவிட்டு உள்ளே சென்றாள்
பழகிய காகத்திற்கு
விசயம் தெரிந்து கத்திக்கொண்டுள்ளது
வானத்தின் எல்லை சென்று

தீட்டு

46 comments
மரண அவஸ்தை என்ற சொல்லின் முழு அர்த்தத்தை அந்த நிமிடத்தில் உணர்ந்து கொண்டிருந்தான் ராஜா. அவனுக்கு அவன் மேலேயே கோபம் உண்டானது. தன் விதியை நொந்தவாறே சாவி விழுந்த ஓட்டையையே பார்த்துக்கொண்டிருந்தான். பெல்ட் அவிழ்ந்து இருப்பதையோ பேண்ட் ஜிப் போடாமல் சரிந்து இருந்ததையோ கவனித்து சரிசெய்யும் மனநிலை அவனிடம் இல்லை. "என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும்" வாய்விட்டு சற்று சத்தமாகவே திட்டிக்கொண்டு பேண்டை மாட்டி, பெல்டை சரி செய்தான்.

பாஸ்க‌ருட‌ன் இரவுக்காட்சிக்கு சினிமாவுக்கு செல்வ‌து என‌ முடிவான‌ பிற‌கு ஊரை விட்டு பதினான்கு கிலோமீட்ட‌ர் தூர‌ம் த‌ள்ளியிருக்கின்ற‌ இந்த‌ சினிமா தியேட்ட‌ருக்கு வ‌ந்த‌து முத‌ல் த‌வ‌று. அதிலும் நேரமாகிவிட்டதால் பாஸ்க‌ரின் பைக்கில் செல்ல‌லாம் என்று அவனுக்கு யோச‌னை தந்த‌து அடுத்த‌ தவ‌று.

தியேட்ட‌ருக்கு வ‌ந்து சேர்ந்த‌ பின் ராஜா, பைக்கிலிருந்து இறங்காமல் அதை தானே ஸ்டாண்டு போட்டு சாவி எடுத்து வ‌ருவ‌தாக‌ கூறி பைக்குக‌ள் நின்ற‌ இட‌த்தில் அதை சரியாக‌ நிறுத்தி விட்டு சாவியை எடுத்து மேல் சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு தியேட்டர் உள்ளே நுழையும் வ‌ரை எல்லாமே ச‌ரியாக‌த்தான் இருந்த‌து. அவ‌ச‌ரமாய் வயிற்றை கலக்குவ‌து போல‌ ராஜாவுக்கு உண‌ர்வு வ‌ர‌, பாஸ்க‌ரிட‌ம் சொல்லிவிட்டு அந்த‌ தியேட்ட‌ரின் க‌ழிவ‌றைப்ப‌குதிக்குள் நுழைந்தான். ஏற்கனவே பலமுறை வந்த இடம்தானென்றாலும் அந்த குடலைப்பிடுங்கும் நாற்றம் இன்றும் அப்படியே இருந்தது. இருவர் சிகரெட் பிடித்தபடியே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்.

தனியாக கதவு வைத்து நான்கடி இடம் விட்டு கட்டப்பட்டிருந்த மூன்றாவது கழிப்பறையில் நுழைந்து கதவை சாத்திவிட்டு மேடையில் கால்வைத்து பேண்டை அவிழ்த்து அமர்ந்து சிறுநீர் கழிக்கும் நேரத்தில் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

சட்டைப்பையிலிருந்த சாவி கீழே குனிந்த நேரத்தில் தவறி பீங்கான் குவளையில் விழுந்தது. சிறுநீர் ஓடிக்கொண்டிருந்த பாதையில் வழுக்கியபடி சென்று பார்வையிலிருந்து மறைந்திருந்தது. அனிச்சை செயலாய் சாவி கக்கூஸ் ஓட்டையில் விழுந்தது அவனது மூளைக்கு எட்டும்முன்னரே பதறி எழுந்தான். சாவி தொலைந்து விட்டது அல்லது தொலைக்கப்பட்டு விட்டது.

"சரியான பைத்தியக்காரன் நான். கீழே விழுந்ததுமே எடுத்திருக்கணும்"

தன்னையே நொந்து கொண்டான் ராஜா. சாவி விழுந்த நேரத்தில் மூத்திரத்தின் மேல் கையை வைப்பது அவனுக்கு அசிங்கமாய் இருந்ததோ என்னமோ. கொஞ்ச நேரத்திற்கு முன்பிருந்த வயிற்று வலி சுத்தமாய் நின்று போயிருந்தது.

சிறுநீரின் மேல் தண்ணீரை ஊற்றிவிட்டு ஓட்டையையே கவனமாக உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். சாவி இல்லாமல் பைக்கை எடுக்க முடியாத கவலையும், பாஸ்கரிடம் வசவு வாங்க வேண்டிய இழவும் சேர்ந்திருந்த படியால் கொஞ்சமும் யோசிக்காமல் கக்கூஸ் ஓட்டைக்குள் கையை விட்டு சாவியை தேடத்தொடங்கினான். சாவி கிடைக்கவில்லை.

அவனது நிலைமை அவனுக்குள் மிகுந்த அருவெறுப்பை உண்டு செய்தது. கையை ஓரடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீர் குழாயில் நன்கு சுத்தம் செய்து கொண்டு உடைந்த மனதுடன் வெளியேறினான்.

கழிவறைப்பகுதி வெளியே சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்த பாஸ்கர், ராஜாவைக் கண்டதும் "சரி வா.. டைமாகுது. உள்ளே போகலாம்" என்று கூறியவாறே சிகரெட்டை மண்தொட்டியில் தூக்கியெறிந்துவிட்டு நகர ஆரம்பித்தான்.

கலங்கிய குரலில் ராஜா, "பாஸ்கர்.."

திரும்பிப்பார்த்த பாஸ்கர், "என்னடா.."

"பைக் சாவி கக்கூஸ்ல வுழுந்துடுச்சுடா"

பாஸ்கரின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது. பதட்டமாய் "என்னடா சொல்ற!"

"ஆமாண்டா. உக்கார்றப்ப தவறி பைக் சாவி கக்கூஸ் உள்ள விழுந்துடுச்சுடா"

அவசரமாக பாஸ்கர் ராஜாவை தாண்டி கழிவறைப்பகுதிக்குள் நுழைந்தான். பின்னால் ஒன்றும் செய்யத்தோணாமல் ராஜாவும் தொடர்ந்தான். குரலின் கலக்கம் நழுவாமல் பாஸ்கர் ராஜாவிடம், "எந்த பாத்ரூம்டா"

ராஜா பொறுமையாக மூன்றாவது அறையை காட்ட அதற்குள் பாஸ்கர் நுழைந்திருந்தான். ராஜா கழிவறையின் வாசலில் பின்னால் நின்றிருந்தான்.

பாஸ்கர், "என்னடா செய்யறது?"

ராஜா, "தெரியலைடா. நானும் டிரை பண்ணிப்பார்த்தேன். ஆனா கிடைக்கல"

பாஸ்கரின் முகத்தில் அருவறுப்பு ஆரம்பமாக தொடங்கியிருந்தது. ஒன்றும் பேசாமல் திரும்பி தியேட்டரின் உள்ளே நுழைந்தான். ராஜாவுக்கு பாஸ்கரிடம் எதையும் கேட்கவும் பயமாக இருந்தது. கண்டிப்பாக கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்டுவான். தியேட்டர் உள்ளே நுழையும் இடத்திலேயே அமர இடம் கிடைக்க பாஸ்கர் அதில் சென்று தலையை கையால் தாங்கி பிடித்துக்கொண்டு அமர்ந்தான். அவனது அருகிலேயே ராஜாவும் அமர்ந்தான்.
மெல்ல மெல்ல கூட்டம் சேரத்தொடங்க.. படம் திரையில் ஓடத்தொடங்கியது. முதல் பாடல், படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் ஆரம்பிக்க பாஸ்கர் எழுந்து வெளியே சென்றான். அவன் வெளியேறுவதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜா. பாட்டு முடிந்தும் பாஸ்கர் இருக்கைக்கு வந்து சேராமலிப்பதை கண்ட ராஜா, பாஸ்கரை தேட, ராஜாவுக்கு எதிர்ப்பக்கத்தில் மேலிருந்து மூன்றாவது வரிசையில் ஆறாவதாய் குனிந்தபடி அமர்ந்திருப்பது தியேட்டரின் மெல்லிய வெளிச்சத்தில் கண்ணில் பட்டது.

ராஜாவுக்கு நாக்கு பிடுங்கிக்கொண்டு சாகலாமா என்று தோணியது. சாவியை தொலைத்த அச்சத்தை விட கக்கூசுக்குள் கையை விட்ட அவமானம்தான் அவனை பிடுங்கி தின்றது. அபிமான நடிகரின் படம் அவனுக்குள் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சினிமா எப்போது முடியும் என்று எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தான். இடைவேளை விடும் சமயத்திலும் ராஜா வெளியேறவில்லை. மெல்ல தனது கையை தூரத்தில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். வாந்தி வரும் போலிருந்தது. எப்படி தன்னால் கையை உள்ளே விட முடிந்தது என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை.

படம் இரவு ஒன்று ஐம்பதை தொடும் சமயத்தில் முடிந்தது. அனைவரும் எழுந்து கலைந்து போகத்தொடங்க பாஸ்கரும் வெளியேறியிருந்தான். ராஜா அனைவரும் சென்ற பின்னர் மெதுவாக தியேட்டரை விட்டு வெளியேறினான். வண்டிகள் ஒவ்வொன்றாக கிளம்பிக்கொண்டிருக்க பாஸ்கர் தியேட்டரின் வாசலிலேயே நின்றிருந்தான்.

ராஜா அவனருகே வந்தபின், "வண்டிக்கு சைடு லாக் போட்டியா?"
அந்த புது மாடல் பைக்கில் சைடு லாக் எப்படி போடுவது என்று ராஜாவுக்கு தெரியாததால் தெரியலைடா என்றான். பாஸ்கருக்கு ராஜாவின் மேல் எரிச்சல் அதிகமாகிக்கொண்டே வந்தது.

அனாதையாக நின்று கொண்டிருந்த பைக்கின் அருகில் சென்று ஹேண்டில் பாரை திருப்பி பார்க்க செல்லபிள்ளையாக திரும்பி நின்றது. பாஸ்கருக்கும் மூச்சு வந்தது. ஸ்டாண்டை விடுவித்து பாஸ்கர் பைக்கை தள்ளிக்கொண்டு போவதை தியேட்டர் காவலாளி ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டிருந்தார்.

இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட பாஸ்கரால் வண்டியை தள்ள முடியவில்லை. தூக்கம் ஒருபுறம். வண்டிசாவி தொலைந்த எரிச்சல் ஒரு புறமாய் இருக்க, கை சோர்வில் பைக் ஒரு புறமாய் சாய்ந்து விழ பார்த்தது.

தடுமாறி பைக்கை சரிசெய்ய, அருகில் வந்து கொண்டிருந்த ராஜா, "கொடுடா.. நான் தள்ளிட்டு வர்றேன்" என்றான். சிடுசிடுப்பான குரலில் "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்" என்று பதில் சொன்னாலும் அவனால் வண்டியை தள்ள முடியவில்லை. வண்டியை சைடு ஸ்டாண்டு போட்டு சரித்து நிறுத்திவிட்டு பாக்கெட்டிலிருந்த கடைசி சிகரெட்டை பற்றவைத்து புகையை நன்கு உள்ளிழுத்து வெளியேற்றினான்.

ராஜா பாஸ்கரிடம் ஒன்றும் பேசாமல் வண்டியை சைடு ஸ்டாண்டு எடுத்துவிட்டு விட்டு தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிகரெட் பிடித்தவாறே பின்னால் பாஸ்கரும் நடக்கத்தொடங்கினான். ராஜா கைப்பிடியை பிடித்து வண்டியை தள்ளிக்கொண்டு போவது பாஸ்கருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. ஆனாலும் இருவரும் ஒன்றுமே பேசாமல் நடந்து கொண்டிருந்தனர். ஊர் வந்து பாஸ்கரின் வீட்டில் பைக்கை ஏற்றி விட்டு பேசாமலேயே திரும்பி நடந்தான் ராஜா. ராஜாவின் மனதில் சாவி தொலைத்த அதிர்ச்சி மெல்ல குறைந்திருந்தது. அசிங்கத்தில் கையை விட்ட அதிர்ச்சி மட்டுமே பாஸ்கருக்கு தெரிந்தது வடுவாகி அமர்ந்தது.

இந்த சம்பவத்திற்கு பின் நிகழ்ந்த இரு நிகழ்ச்சிகளில் முதலாமானது..

பாஸ்கர், ராஜாவிடம் பேசுவதை முழுமையாக நிறுத்தியிருந்தான். அவனது பைக்கின் ஹேண்டில் பாரில் கையை வைக்கும் இடத்தில் இருந்த அழகான பூப்போட்ட ரப்பர் கைப்பிடியை அன்றிரவே பிளேடை கொண்டு அறுத்து தூக்கியெறிந்திருந்தான்.

அடுத்தது.. இப்போதெல்லாம் ராஜா தன் இரண்டு வயது மகன் சுப்பிரமணி ஆய் போனால் தானே தூக்கிக்கொண்டு போய் சுத்தம் செய்து விடுகிறான். வீணாய் மனைவியை சத்தம் போட்டு அழைத்து வேலை கொடுப்பதில்லை.

Wednesday, June 10, 2009

ஆனைத்தலைவிக்கு திருமண வாழ்த்துக்கள்!

29 comments


இன்று (11-06-2009) திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் எங்கள் அன்பு ஆனைத்தலைவி பொன்ஸ் அக்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவண்

அகில உலக பாகசவினர்

Thursday, June 04, 2009

அண்ணாச்சியும் இலக்கியத்துவமும்

31 comments

தல, அண்ணாச்சியின் அறிவை வியந்தபோது எடுத்த படம்!

இனி அண்ணாச்சி கி.பி. 2006ல் எழுதிய ஒரு பதிவிலிருந்து மீள்பதிவாக்கப்படும் ஒரு இலக்கிய மொக்கை!

@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$

நட்சத்திரங்கள் கண்சிமிட்டுகின்றன - இது குறிப்பாக என்ன உணர்த்துகிறது? நிறைய விசயங்களை உணர்த்தினாலும் அடிப்படையாகக் காலத்தை அது பூடகமாகப் பதிவு செய்கிறது எந்த வகையில்? நட்சத்திரங்களை நாம் பகலில் பார்க்க முடிவதில்லை. எனவே காட்சி நடப்பது இரவில் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


காலத்தின் இருப்பை உறுதி செய்ததும், இன்னொரு விசயம் புலப்படுகிறது. அதுவும் காலம் சார்ந்த சூழல்தான். அதாவது நட்சத்திரங்கள் தென்படுகிறதென்றால், மேக மூட்டமில்லாத தெளிவான வானம் அந்த இரவுக்கு. இன்னமும் நுட்பமாக ஆராய்ந்தால், முழுநிலவற்ற தினமாக இருந்தால்தான் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதை தெளிவாக உணரமுடியும்.
பாருங்கள்!! இதுதான் அஞ்சல் நவீனத்துவத்தின் அருமை. ஒரு வரி எத்தனை விசயங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கிற்து.அஞ்சல் அலுவலகத்தில் கடிதங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் காட்சியோடு ஒப்பிடும்போது அஞ்சல் நவீனத்துவம் எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது உங்களுக்கு எளிதாகப் புரிந்து விடும்.


ஆனால், இதோடு மட்டுமே காட்சி முடிவடைவதில்லை.
யாரோ ஒருவன் வானத்தைப் பார்க்கும்போதுதான் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதைப் பார்க்கிறான். அவன் எதற்காகப் பார்க்க வேண்டும்? இரவு நேரம் என்பதை ஏற்கெனவே உணர்ந்திருக்கிறோம். ஆக, இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றித்தான் கவிதை பேசுகிறது. ஏன் அது ஒருத்தியாக இருக்கக் கூடாதென்று கேட்டால் உங்களைப் பற்றி நான் என்ன சொல்வது நண்பரே?! ஒருத்தி என்றால் 'செல்வி' 'அரசி'வகையறாக்களைப் பார்ப்பதற்கே நேரமிருக்காதே..வானத்தைப் பார்க்க எங்கே நேரமிருக்கும். ஆகவே அது ஒருவன் தான் என்று உறுதியாக நம்புங்கள்.('ஆணாதிக்கவாதி' என்று எழும் குரல்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அடுத்த பத்திக்கு ஓடி வந்து விடுங்கள்)


இதோடு முடிந்து விடவில்லை. அவன் வானத்தை எங்கிருந்து பார்த்தான்? வீட்டின் சன்னல் வழியாகப் பார்த்திருப்பானா? அல்லது கதவு வழியாகப் பார்த்திருப்பானா? அல்லது மொட்டை மாடியில் இருந்து பார்த்திருப்பானா? இத்தனைக் கேள்விகளையும் ஒரே நேரத்தில் எழுப்புவதிலிருந்தே இந்தக் கவிதையின் படிமக் கட்டுமானம் இந்நேரத்துக்கு உங்களுக்குப் புரிந்திருக்கும்.


இத்தனை கேள்விகள் எழுந்தாலும், நுணுக்கமாக ஆராயும்போது இதில் முதலிரண்டு கேள்விகளுக்கும் சாத்தியமில்லை என்பது புலனாகிவிடும். வானத்து நட்சத்திரத்தை அவதானிக்கிற மனநிலையில் இருப்பவன் வீட்டிற்குள்ளிருந்து அதைச் செய்ய முடியுமா? வீட்டின் பிடுங்கல்களிலிருந்து வெளிவரும் மனிதனால்தான் வானம் என்று ஒன்றிருப்பதையே உணர முடியும். அவனால்தான் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க முடியும். (பாருங்கள். இங்கும் கூட பூடகமான வாழ்க்கைத் தத்துவத்தை ஒரு எளிய படிமமாகக் கவிதை உங்களையறியாமல் உங்களுக்குச் சொல்லி விடுகிறது)


ஆக, அந்த ஒருத்தன் வானத்தை நேரடியாகப் பார்க்கும் நிலையில் திறந்த வெளியொன்றில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்வதில் தடையில்லை. சரி, அந்தத் திறந்தவெளி மொட்டை மாடியாகத்தான் இருக்க வேண்டுமா? ஏன் ஒரு திறந்த சத்திரமாக இருக்கக் கூடாது?
(கேள்விகள்..கேள்விகள்.. கேள்விகள் - இதுதான் அ.ந வில் இலக்கை நோக்கிய பயணம்)


னில் நட்
சத்திரங்கள்



என்ற வார்த்தையை இங்கே அவதானித்தீர்களென்றால் கவிஞன் உங்களுக்கு அற்புதமான குறிப்பொன்றை நுட்ப வாசகன் மோப்பம் பிடித்து உணர்ந்து கொள்வதற்காக விட்டுச் சென்றிருப்பதை உணர முடியும் .ஆக, கவிதையின் இந்த வரிகளிலிருந்து சத்திரத்தில் இருக்கும் ஒரு மனிதனைத்தான் கவிதை குறிப்பால் உணர்த்துகிறதென்பதை உணர முடிகிறதல்லவா?


அப்படியானால், நாம் இதுவரை என்ன அறிந்திருக்கிறோம்?


இரவு நேரம்
அதிக
நிலவொளியில்லாத வானம்
திறந்த சத்திரத்தில்
படுத்திருக்கிறான்
ஒருவன்
வானம் பார்த்தவாறு.



என்று கவிதைக்குள் அடங்கிக் கிடக்கும் கவிதையை உணர்ந்து கொள்ள முடிகிறதா உங்களால்?! நாலு வரிகளில் இந்தக் கவிதை இதை மட்டும்தானா சொல்கிறது என்றால்.... இல்லை. இன்னமும் இருக்கிறது.


சத்திரத்தில் படுத்திருக்கும் ஒருவன் என்றால் அவன் எத்தகையவனாக இருக்கக் கூடும் என்ற உபகேள்வியை உங்களுக்குள் விதைக்கச் சொல்கிறது இந்தக் கவிதை - அஞ்சல் நவீனத்துவத்தின் இன்னொரு முகம்தான் இந்த உபகேள்விகள்.


ஆம். புத்திசாலிதான் நீங்கள். சத்திரத்தில் தங்குகிறவன் என்பதால் அவன் நிச்சயம் ஒரு பிச்சைக்காரனாகத்தான் இருக்கக் கூடும். பிச்சைக்காரன் வானத்து நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதை கவனிக்க நேரமிருக்கிறதென்றால் அவனுக்கு அன்று வயிறு நிறைந்திருக்கிறது என்றுதானே பொருள்? ஆக, வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுகின்றன என்ற ஒரே வாக்கியத்திலிருந்து வயிறார சாப்பிட்ட ஒரு பிச்சைக்காரனின் சித்திரத்தை அழகியலோடு படிம உத்தியால் சொல்லி, வாசகனை அவனது நுட்ப உணர்வுகளால் உந்தித்தள்ளி வானத்து நட்சத்திரத்தோடு முடிச்சு போடுவதில் விளிம்புநிலை மனிதர்கள் வயிறார சாப்பிடும்போதுதான் ஆகாயத்தில் விண்மீன்கள் கூட ஆனந்தமாய் கண்சிமிட்ட முடியுமென்ற சகோதரத்துவம் நிறைந்த சிந்தையை, மனிதம் தளும்பும் உணர்வை வெளிப்படுத்துகிறார் கவிஞர். இங்கேதான் அஞ்சல் நவீனத்துவம் அழகாய் தலைதூக்கி நிறகிறது.


ஆனால், இதோடு மட்டுமே நிறைவதில்லை இந்தக் கவிதை.
இன்னமும் உபகேள்விகளால் உந்தித் தள்ளப்படுவீர்களேயானால், கவிதை இன்னமும் உங்களைப் புதிய திசைகளுக்குள் அழைத்துச் செல்லும். புரியாத மனிதமனங்களின் பல்வேறு அடுக்குகளுக்குள் உங்களை அடுக்கி வைக்கும்.


எம்மாதிரி கேள்விகள் என திகைக்க அவசியமேயில்லை.


சத்திரம் என்றுதானே கவிதை கோடி காட்டியிருக்கிறது. எம்மாதிரியான சத்திரம் என்பது குறித்த எந்தக் குறிப்பையும் கவிதை வாசகனுக்கு ஊட்டவில்லை. எனவே, அது சிதிலமடைந்த கட்டிடமா அல்லது மேற்கூரை மட்டும் காலியான இடமா என்பது குறித்த ஊகங்களை வாசகனே அறிந்து கொள்ளலாம். வயிறு நிறைய சாப்பிட்டான் பிச்சைக்காரன் என்ற முடிவு மட்டுமே கவிதையால் உணர்த்தப்படுகிறது. எங்கே சாப்பிட்டிருப்பான், ஒரு இடத்திலா அல்லது பல இடங்களீல் சேர்த்த பிச்சையா என்ற உப கேள்விகள இன்னமும் எச்சமில்லாமல் மிச்சமிருக்கின்றன.


அடிப்படை சிந்தையும், அழகியல் உணர்வும், வார்த்தை நுணுக்கமும், உணர்த்தும் படிமங்களும், உணர்த்தாமல் விடும் செய்திகளும் தொக்கி நிற்கும் கவிதைகள் தாமாகவே அஞ்சல் நவீனத்துவத்தில் அழியா இடம் பெற்று விடுகின்றன. அத்தகைய ஒரு கவிதைதான் மேலே நான் சிலாகித்தது. அதுசரி!! இவ்வளவு சொல்லியும் இந்தக் கவிதையை எழுதிய மகாகவிஞன் யாராயிருக்கும் என்று சொல்லவேயில்லையே என்கிறீர்களா?


இவ்வளவு 'வெட்டி'யாக எழுதவும் சிந்திக்கவும் கவிம்டத்தலைவனை விட்டால் வேறு யார் இருக்க முடியும் இந்த உலகத்தில்? அடியேனின் அற்புத படைப்புதான் அடியேனே சிலாகித்த அந்தக் கவிதை.


இம்மாதிரி புதிய இசங்களை அறிமுகப்'படுத்து'கிறவர்களுக்கு 'ஏலாதி' விருது கிடைக்காவிட்டாலும், 'ஆவலாதி' விருதாவது கிடைக்குமா?

--- ஆசிப் மீரான் (அண்ணாச்சி)

Tuesday, June 02, 2009

தல போல வருமா ஹோய் ஹோய் தல போல வருமா..!

36 comments




சென்ற பதிவில் பாகச பொறுப்பை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு தலையின் கவிக்கூக்களை இட்டதன் வெற்றி புதியவர்களை பாகசவின் பக்கம் ஈர்த்து திருப்பியுள்ளது..

அந்த வெற்றி முரசின் அடையாளமாகவும் அடுத்த கட்டமாகவும்..

அந்த இதயத்தில் இன்னும் கவி(ஹை)க்கூக்களை மொத்தமாக தரவிறக்கி படித்து மகிழ இணைப்பு இதோ

மேலும் சில கவுஜ மாதிரிகள் தலயின் புகழை பரப்ப மாத்திரம் என்பதை அழுத்திச் சொல்லிக்கொள்கின்றேன் :)

உனக்கான
காத்திருப்புக்களிலெல்லாம்
ஏறிவிடும்
மனதின்வயது
உன்னை பார்த்தநிமிடத்திலேயே
குழந்தையாக மாறி குதுகுலிக்கிறது.

****

உன் மூச்சுக் காற்றும்
போதை ஏற்றுகிறது பார்
நீஊதிக்கொடுத்த பலூன்
ஒரு இடத்தில் நிற்கமாட்டாமல்
அறையெங்கும் தள்ளாடியபடியே
வலம் வருகிறது.

***

சத்தமிடாமல்முத்தமிடத்தெரியாதா
என்று கோபப்படத்தெரிகிறது
உனக்கு
நம்ப மறுக்கும்காதுகளுக்கு
சத்தத்தைமட்டுமே
கொடுக்கத்தெரிந்திருக்கிறது எனக்கு.

***
இரவு நேரங்களில்
மொட்டைமாடிக்குவராதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
நட்சத்திரங்கள்
வெட்கித்தற்கொலை
செய்துகொள்கின்றன.

***

இலக்கணமாக நீ
இருக்கும் தைரியத்தில் தான்
உனைபேசும்கவிதைகள்
மரபுடைக்கின்றன.

*****

இந்த மாதிரி கவுஜைகளையும் தல எழுதிக்கொண்டு தான் இருந்தார். போதாத நேரத்தில் மூத்தப்பதிவராகிப்போன காரணங்களினால் கவுஜைகள் குறைந்து விட்டது. விதி வலியது!

இந்த இணைப்பில் இருக்கும் தல கவுஜைகள் படித்து தனியே பதிவெழுதி கலாய்ப்பவருக்கு உடனே பாகசவின் ஏதாவது ஒரு மாகாணத்தின் அல்லது மாநிலத்தின் தலைமைப்பொறுப்பு மற்றவரிடமிருந்து பிடுங்கியாவது தரப்படுமென்று இங்கு உறுதியளிக்கின்றேன்.

நன்றாக இருக்கிறது என்ற ஒற்றை வார்த்தையில் கலாய்த்துச்செல்பவருக்கு தலைக்கு அணிவிக்கப்பட்ட கோயிந்து கிரீடத்தில் உங்கள் முத்திரையையும் இடலாம்.

இப்படிக்கு

சென்ஷி

பாகச செயலாளர்

ஷார்ஜா, அமீரகம்

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com